Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Responsible consumption and production

நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை உறுதி செய்தல்

நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை உறுதி செய்தல்

நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி என்பது வளம் மற்றும் ஆற்றல் திறன், நிலையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகள், பசுமையான மற்றும் ஒழுக்கமான வேலைகள் மற்றும் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகும். அதன் செயல்படுத்தல் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களை அடைய உதவுகிறது, எதிர்கால பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளைக் குறைக்கிறது, பொருளாதார போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறது மற்றும் வறுமையைக் குறைக்கிறது.

தற்போதைய நேரத்தில், குறிப்பாக கிழக்கு ஆசியாவில், இயற்கை வளங்களின் மீதான பொருள் நுகர்வு அதிகரித்து வருகிறது. காற்று, நீர் மற்றும் நில மாசுபாடு தொடர்பான சவால்களை ஏனைய நாடுகளும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.

நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி "குறைவானதை கொண்டு மேலும் மேலும் சிறப்பாக" செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வாழ்க்கைச் செயல்பாட்டில் வள பயன்பாடு, சீரழிவு மற்றும் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து நிகர நலன் பெறும் ஆதாயங்களை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் இது வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும். உற்பத்தியாளர் முதல் இறுதி நுகர்வோர் வரை அனைவரையும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலியில் செயல்படுவதிலும் குறிப்பிடத்தக்க கவனம் தேவை. நிலையான நுகர்வு மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து நுகர்வோருக்கு கல்வி கற்பித்தல், தரநிலைகள் மற்றும் சிட்டைகள் மூலம் அவர்களுக்கு போதுமான தகவல்களை வழங்குதல் மற்றும் நிலையான பொது கொள்முதலில் ஈடுபடுதல் என்பவை இதில் அடங்கும்.

12.1

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி திட்டங்களுக்கான 10 ஆண்டு கால கட்டமைப்பின் முன்னெடுப்பு தொடர்பில் அனைத்து நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்தலும், அத்தோடு அபிவிருத்தியடைந்த நாடுகள் முன்னோக்கி செல்வதானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அபிவிருத்தி மற்றும் திறன்கள் தொடர்பிலான கண்ணோட்டத்தினை பெறக்கூடியதாக இருக்கும்

12.2

2030களில், இயற்கை வளங்களின் பாவனை தொடர்பில் நிலையான முகாமைத்துவம் மற்றும் செயற்திறன் தொடர்பிலான அணுகல் மிக முக்கியமாகும்

12.3

2030களில், உலகளவிலான உணவு விரயமானது சில்லறையாகவும் நுகர்வோர் மட்டங்களிலும் உற்பத்தியின் போதும் மற்றும் விநியோகிக்கும் சங்கிலியின் மூலமும் உணவின் இழப்பைக் குறைத்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்திய இழப்புக்களும் அரைவாசியாகக் குறைக்கப்படல் வேண்டும்

12.4

2020களில், இரசாயனச் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் அனைத்து கழிவுகளும் அவற்றின் வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச கட்டமைப்புகளுக்கு அமைவாகவும் காற்றில் இவை வெளியேற்றப்படுதலை கணிசமானளவு குறைக்க வேண்டியதுடன், நீர் மற்றும் மண்ணில் கலப்பதனையும் அதன் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதகமான விளைவுகள் ஏற்படுவதைக் குறைத்தல் வேண்டும்

12.5

2030களில், கணிசமானளவு கழிவுகள் உற்பத்தியாவதை தடுத்தல், குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலமாக குறைக்க முடியும்

12.6

நிறுவனங்கள் குறிப்பாக பாரிய மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு நிலைபேறான நடைமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த நிலைபேறான தகவல்களை அவர்களின் அறிக்கையில் பிரசுரிக்க வேண்டும்

12.7

நிலையான பொது கொள்முதல் நடைமுறைகள் அவற்றின் தேசிய கொள்கைகளுக்கும் மற்றும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக ஊக்குவிக்கப்படல் வேண்டும்

12.8

2030களில், அனைத்து இடங்களிலுமுள்ள மக்கள் நிலையான அபிவிருத்தி மற்றும் இயல்பான இணக்கப்பாட்டுடனான வாழ்க்கை முறை தொடர்பிலான தகவலும் மற்றும் விழிப்புணர்வும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்

12.A

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்தி அதன் மூலம் மேலும் நிலைபேறான முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை முன்னோக்கி நகர்த்த முடிகிறது

12.B

அபிவிருத்தி மற்றும் முன்னெடுப்பு கருவிகள் மூலம் நிலையான அபிவிருத்தியின் தாக்கங்களை நிலையான சுற்றுலாத்துறை தொடர்பில் கண்காணிக்க முடிவதுடன்அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களும் மற்றும் உள்நாட்டு கலாச்சாரம் மற்றும் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிகிறது

12.C

சந்தைச் சிதைவுகளை நீக்குவதன் மூலம் திறனற்ற புதைப்படிவ எரிபொருள் மானியங்களை பகுத்தறிவதுடன் அது அனாவசிய நுகர்வினை ஊக்கப்படுத்துகிறது. தேசிய சூழ்நிலைகளுக்கேற்ப வரிவிதிப்பினை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் மானியங்களையும் விலக்க வேண்டியுள்ளதுடன் சுற்றுச்சூழலுக்கான தாக்கங்களை அவை எங்கே ஏற்படுத்துகின்றதோ அவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் நிலைமைகளை முழுமையாக கண்காணிக்க வேண்டியதுடன் மற்றும் அதன் மூலம் ஏற்படும் சாத்தியத்துடனான பாதகமான விளைவுகளை அவற்றின் விருத்தி தொடர்பில் சரியான முறையில் அதை பாதுகாத்து ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களைஅதன் மூலம் பாதுகாக்க வேண்டும்