Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Clean water and sanitation

சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள்

சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள்

நாம் வாழ விரும்பும் உலகில், அனைவருக்கும் சுத்தமான, அணுகக்கூடிய நீர்- இன்றியமையாத பகுதியாகும், இதை அடைய உலகத்தில் போதுமான புதிய நீர் உள்ளது. இருப்பினும், மோசமான பொருளாதாரம் அல்லது மோசமான உள்கட்டமைப்பு காரணமாக, குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள், ஒவ்வொரு ஆண்டும் போதிய நீர் வழங்கல் இன்மை, துப்புரவேற்பாடு மற்றும் அதுசார் சுகாதாரம் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.

தண்ணீர் பற்றாக்குறை, நீரின் மோசமான தரம் மற்றும் போதிய துப்புரவேற்பாடு ஆகியவை உணவு பாதுகாப்பு, வாழ்வாதார தேர்வுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு கல்வி வாய்ப்புகளை பெறுவதில் எதிர்மறையாக பாதிக்கிறது. தற்போது, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நன்னீர் ஆதாரங்களுக்கான அணுகலைக் குறைக்கும் அபாயத்துடன் வாழ்ந்து வருகின்றனர், மேலும் 2050 ஆம் ஆண்டளவில், குறைந்தது நான்கு பேரில் ஒருவராவது நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான நன்னீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாட்டில் வாழ வாய்ப்புள்ளது. உலகின் ஏழ்மையான நாடுகளில் சிலவற்றை பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் குறிப்பிட்ட வறட்சி மோசமாக்குகிறது. அதிர்ஷ்டவசமாக, கடந்த தசாப்தத்தில் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பாக பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் உலக மக்கள் தொகையில் 90% க்கும் அதிகமானோர் இப்போது மேம்பட்ட குடிநீர் ஆதாரங்களை அணுகியுள்ளனர்.

துப்புரவு மற்றும் குடிநீருக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு, சகாரா கீழமை ஆபிரிக்கா, மத்திய ஆசியா, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ளூர் மட்டத்தில் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகளை நிர்வகிப்பதில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

6.1

2030களில், உலகளவில் பாதுகாப்பானதும் மற்றும் அனைவருக்கும் போதுமான குடிநீர் கிடைப்பதை
உறுதிசெய்தல் மிக முக்கியமாகும்.

6.2

2030களில், நிறைவான மற்றும் சமத்துவமான சுகாதார வசதிகள் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவிற்கு கொண்டு வருதல். அத்துடன் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளிலுள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்களின் தேவைகள் தொடர்பில் பிரதான கவனத்தை செலுத்த வேண்டும்.

6.3

2030களில், நீரின் தரத்தினை மேம்படுத்த மாசுபடுதலை குறைத்தல், குப்பைகளை நீக்குதல் மற்றும் அபாயகரமான இரசாயனங்களையும் பொருட்களின் வெளியீட்டை குறைத்தல், பராமரிக்கப்படாத கழிவு நீரினை பாதி விகிதமாகக் குறைத்தல் மற்றும் கணிசமானளவு நீரினை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அதன் மூலம்
உலகளவில் பாதுகாப்பான மறுபாவனைக்கான நீரினை பெற்றுக்கொள்ளுதல் முக்கியமாகும்.

6.4

2030களில், கணிசமானளவு நீரின் பயன்பாட்டுத் திறன் அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்கப்பட
வேண்டியுள்ளதுடன் குடிநீரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நிலைபேறான மீளப்பெறுதல் மற்றும் சுத்தமான
நீரை வழங்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன் குடிநீர் பற்றாக்குறையுள்ள மக்களின்
எண்ணிக்கை கணிசமானளவு குறைக்கப்படல் வேண்டும்.

6.5

2030களில், அனைத்து மட்டங்களிலான ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவத்தை அமுல்படுத்த வேண்டியதுடன் பொருத்தமான எல்லை கடந்த ஒத்துழைப்பு மூலமும் அடங்கலாக இவை மேற்கொள்ள வேண்டும்.

6.6

2020களில், மலைகள், காடுகள், ஈர நிலங்கள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் உட்பட நீர்
தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு மீள்சுழற்சியில் பாவிக்கக்கூடியதாக அமைக்க வேண்டும்.

6.A

2030களில், சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படல் மற்றும் உதவி செய்யும் அளவு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நீர் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பிலான நிகழ்ச்சித் திட்டங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும். நீர் அறுவடை, கடல் நீர் சுத்திகரிப்பு, நீரின் பயன்திறன், கழிவுநீர் சுத்திகரிப்பு, மீள்சுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்கள் உட்பட இவையும் அதிகரிக்கப்படல் வேண்டும்.

6.B

நீர் மற்றும் சுகாதார நடவடிக்கை மேலாண்மையானது உள்ளுர் சமூகங்களின் பங்களிப்பினை அவர்களின்
ஆதரவுடன் அதிகரித்து வலுப்படுத்தல் வேண்டும்.