Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

End poverty in all its forms everywhere

அனைத்து இடங்களிலும் அனைத்து வடிவங்களிலுமுள்ள வறுமையை ஒழித்தல்

அனைத்து இடங்களிலும் அனைத்து வடிவங்களிலுமுள்ள வறுமையை ஒழித்தல்

வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். 1990 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ள போதிலும், மிக அதிகமான மனித தேவைகளுக்காக இன்னும் பலர் போராடுகிறார்கள்.

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 736 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1.90 அமெரிக்க டொலருக்கும் குறைவான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்; பலருக்கு உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதி இல்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது, ஆனால் இம்முன்னேற்றம் சீரற்றதாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் ஏழைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஏனெனில் அவர்களுக்கு குறைந்தளவிலான ஊதியம், கல்வி, மற்றும் குறைவான சொத்து உரிமை உள்ளது.

தெற்காசியா மற்றும் சகாரா-கீழமை ஆபிரிக்கா போன்ற பிற பகுதிகளில் தீவிர வறுமையில் வாழும் 80 சதவீதத்தினரைக் கொண்டுள்ளமையால் முன்னேற்றம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களாக, சண்டைகள் மற்றும் உணவு பாதுகாப்பின்மை, மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்னும் கூடுதலான செயற்பாடுகள் தேவை.

SDGக்கள் 2030க்குள் அனைத்து வடிவங்களிலும் அனைத்து பரிமாணங்களிலும் உள்ள வறுமையை, நாங்கள் தொடங்கியதை முடிக்க தைரியமான அர்ப்பணிப்புடன் முடிவுக்குக் கொண்டுவர உதவும். இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய, அதிகரிக்கும் அடிப்படை வளங்களையும் சேவைகளையும் குறி வைப்பதை உள்ளடக்குகிறது, மேலும் சண்டைகள் மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் ஆதரிக்கின்றது.

1.1

2030 ஆம் ஆண்டளவில் எல்லா இடங்களிலுமுள்ள மக்களின் தீவிர வறுமையை ஒழித்தல். தற்போது நாளொன்றுக்கு 1.25 அமெரிக்க டொலர்களிலும் குறைந்த வருமானம் பெறும் மக்களே தீவிர வறுமையிலுள்ளவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.

1.2

2030களில், தேசிய வரைவிலக்கணங்களின் படி வறுமையினதும், அதன் சகல பரிமாணங்களின் கீழும் வாழும் எல்லா வயதுமட்டங்களிலும் உள்ள ஆண்கள்,
பெண்கள் மற்றும் சிறுவர்களின் விகிதாசாரத்தினை குறைந்தது அரைவாசியாக குறைத்தல்.

1.3

தேசிய ரீதியில் பொருத்தமானதும், ஆகக்குறைந்த வருமானமீட்டும் பிரிவினர் உள்ளடங்கலாக அனைவருக்குமானதுமான சமூக பாதுகாப்பு அமைப்புக்கள்
மற்றும் நடவடிக்கைகளை அமுல்படுத்தல் அத்துடன் 2030 களில் நலிவடைந்தோர்; மற்றும் வறியவர்களுக்கு போதியளவில் பாதுகாப்பை வழங்கக்கூடியதாக இருத்தல்.

1.4

2030 களில், எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கு பொருளாதார வளங்கள், அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ளுதல், காணி மற்றும் ஏனைய சொத்துக்கள் மீதான உரிமை மற்றும் அதிகாரம், பரம்பரைச் சொத்துக்கள், இயற்கை வளங்கள், பொருத்தமான
புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறுநிதி அடங்கலான நிதிச்சேவைகள் ஆகியவற்றில் சமமான உரிமை இருப்பதை உறுதி செய்தல்.

1.5

2030களில், ஏழைகள் மற்றும் நலிவடைந்தோரின் தாக்குப்பிடிக்கக் கூடிய தன்மையினை கட்டியெழுப்புதல் மற்றும் காலநிலை சம்பந்தமான தீவிர நிகழ்வுகளின் போது அவர்களின் பாதிக்கப்படும் தகவினையும், ஏனைய பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் தொடர்பான அதிர்ச்சிகள், அழிவுகளையும் குறைத்தல் மிகவும்
முக்கியமாகும்.

1.A

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் போதுமானதும், எதிர்வு கூறத்தக்கதுமான வருமானத்தை வழங்குவதற்காக, குறிப்பாக ஆகக்குறைந்தளவு அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வறுமையை அதன் சகல பரிமாணங்களிலும் ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவதற்காக, அதிகரிக்கப்பட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பின் மூலம் பல்வேறுபட்ட மூலதன ஆதாரங்களிலிருந்து குறிப்பிடத்தக்களவு வளங்கள் ஒன்றுதிரட்டப்படுவதை உறுதி செய்தல்.

1.B

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளின் மீதான அதிகரிக்கப்பட்ட முதலீட்டுக்கு உதவியாக, வறியோர் சார்பான மற்றும் பாலின சார்பான அபிவிருத்தி
திட்டங்களை அடிப்படையாக கொண்டு, உறுதியான கொள்கை கட்டமைப்புக்களை தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் உருவாக்க வேண்டும்.